Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாணார்பட்டி பக்தர்கள் தலையில் ... அம்மையார் கோவில் தெப்பக்குளத்தில் குவிந்துள்ள குப்பைகள்! அம்மையார் கோவில் தெப்பக்குளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதியில் நிறுத்தப்பட்ட பெருமாள் கோயில் தேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
12:08

தேவதானப்பட்டி : தஞ்சை ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் செய்யும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள், பூர்ணாம்பாள், புஷ்பதாயாம்பாள் தெய்வங்கள் உள்ளன. உள் வளாகத்தில் தீர்த்த தொட்டி கிணறு உள்ளது.இக்கிணற்றில் நீர் எடுத்து நாள்தோறும் பெருமாளுக்கு அபிஷேகம் நடந்து வந்தது. இக்கோயில் தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கனவில் தோன்றினார்: ராஜ ராஜ சோழன் பாண்டிய நாட்டிற்கு வந்த போது குள்ளப்புரத்தில் தங்கியுள்ளார். இரவில் தீராத வயிற்று வலி ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளார்.அப்போது மன்னன் கனவில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் தோன்றி மறைந்துள்ளார். உடனடியாக மன்னனுக்கு வயிற்று வலி தீர்ந்துள்ளது. இதற்காக மன்னன் உத்தண்ட சவுந்தராஜ பெருமாளுக்கு கோயில் கட்டிள்ளார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலில் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் குள்ளப்புரம், மருகால்பட்டி, சந்திராபுரம், கோயில்புரம், கன்னிமார்புரம் உட்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொள்வார்கள்.பணிகள் நிறுத்தம்:இந்நிலையில் கோயில் இந்துஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு தேரோட்டம் நடக்கவில்லை. கோயிலில் புதிய தேர் செய்வதற்காக அரசு சார்பில் 14 லட்சம் ரூபாய், பொதுமக்கள் பங்களிப்பாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தேர் கட்டும் பணி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. ஆனால் பணிகள் தொடர்ந்து நடக்கவில்லை. பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குள்ளப்புரம் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் செய்யும் பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாக அதிகாரி ராஜா கூறுகையில், "தேர் பணியில் ஈடுபட்டவருக்கு உடல் நலம் சரி இல்லை. அதனால் தடை பட்டுள்ளது. விரைந்து பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஆடி இருபத்தெட்டாம் பெருக்கை முன்னிட்டு தங்க பல்லக்கில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் ஏகாதசி உற்சவத்தை ஒட்டி நடக்கும் செம்பை சங்கீத உற்சவம் பொன்விழா ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar