Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் ... நாகராஜா கோயிலில் பெண்கள் பால் ஊற்றி வழிபாடு! நாகராஜா கோயிலில் பெண்கள் பால் ஊற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பனை தரிசிப்பதற்காக .. சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
10:08

சபரிமலை: மலையாள புத்தாண்டு தினத்தில், ஐயப்பனை தரிசிப்பதற்காக, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று நடந்த ஒரு விழாவில், இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது மலையாள பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5:30 க்கு திறந்தது. வேறு எந்த விசேஷ பூஜையும் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை மூடப்பட்டது. மலையாள புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்தார். அப்போது ஐயப்பனை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து தந்திரி அபிஷேகங்கள் நடத்திய பின், நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். அதன்பின், வழக்கமான பூஜைகள் நடந்தன. வரும் ஆக., 21 வரை கோயில் நடை திறந்திருக்கும். அனைத்து நாட்களிலும் இரவு படிபூஜை நடைபெறும். ஆக., 21 இரவு 10:00 மணிக்கு நடை மூடப்பட்ட பின், திருவோண பூஜைக்காக செப்., 5 ல் மாலை நடை திறக்கப்படும். செப்.,9 ல் இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். சபரிமலையில் 3 வது ஆண்டாக நேற்று அரிவராசனம் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த ஆண்டுக்கான விருதை மலையாள பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு, தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் வழங்கினார். இதில் தேவசம்போர்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar