பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானா னந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா கடஸ்தாபனத்துடன் துவங்கியது. திருக்கோவிலூர், ஞானானந்தா தபோவனத்தில் ஆண்டு தோறும் சிறப்பாக நடக்கும் சரத் நவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு கடஸ்தாபனத்துடன் துவங்கி, அடுத்த மாதம் 3ம் தேதி வரை விழா நடக்கிறது. தினம்காலை, மாலை 5.30 மணிக்கு சக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்திரி மண்டபத்தில் லட்சார்ச்சனை, ஞானாம்பிகைக்கு சகஸ்ர நாமார்ச்சனை நடக்கிறது. வரும் 2ம் தேதி மதியம் 1.15 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு, விசேஷ அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயலாளர் கிருஷ் ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.