ராவணனால் இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்ட சீதையை மீட்க, ராமர் தம் பரிவாரங்களுடன் இலங்கை செல்லும் வழியில் ராமேஸ்வரம் வந்து, அங்குள்ள உயரமான மலை மீது ஏறி நின்று இலங்கை இருக்கும் தென்திசையைப் பார்த்து, வானரப் படைகளின் உதவியோடு சேதுபந்தனம் அமைத்து இலங்கை சென்றார். ராமர் மலைமீது நின்ற இடம், அவரது பாதச்சுவடு பதிந்து புனித இடமாகிவிட்டது. ராமேஸ்வரத்தில் ராமர் பாதம் பதிந்த மலைப்பகுதி கந்தமாதன பர்வதம் என்று குறிப்பிடப்படுகிறது.