Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிவசடையப்பர் கோவிலில் 16ல் ... சித்தானந்தர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி கோவில்களில் அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
12:12

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று கோவிலில் இந்து சமய அறநிலையத் ஆணையர் தனபால் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதில் கோவில் வளாகத்தில் உள்ள குழந்தையம்மன் சன்னதி, அம்புஜவல்லித்தாயார் சன்னதி பகுதிகளில் உள்ள கிரானைட், மார்பில்ஸ். டைல்ஸ் முதலான கற்களை அகற்றி கருங்கற்களால் தளம் அமைக்க உத்தரவிட்டார்.அர்ச்சகர்கள் பற்றாக்குறை இருந்தால் புதியஅர்ச்சகர்களை நியமிக்கவும், நாதஸ்வர வித்வான், மற்றும் கோவில் பாதுகாவலர் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட திருப்பணிக்குழு கமிட்டியின் பதவிக்காலம் முடிவடைந்தது. கும்பாபிஷேகப் பணிகளுக்கு தமிழக அரசு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததில் நடைபெறாமல் உள்ள சில பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மீண்டும் திருப்பணிக்குழு அமைப்பது குறித்த அரசு ஆலோசனை படி பின்னர் முடிவு செய்யப்படும். தற்போது நியமிக்கப்பட்டுள்ள செயல் அலுவலர், பணிகளை கண்காணித்து அனைத்து பணிகளும் முடிவடைந்து அறிக்கை அளித்த பின்னர் கும்பாபிஷேகத்திற்கான தேதி குறிப்பிடப்படும்.கோவிலுக்கு நன்கொடை வழங்குபவர்கள் விவரம் ஒளிவு மறைவின்றி பொதுமக்களுக்கு விளம்பர பலகைகள் மூலம் அறிவிப்பு செய்யப்படும் என்றார்.கடலூர் எம்.பி., அருண்மொழித்தேவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ரவி, உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

திட்டக்குடி : அசனாம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நேற்று திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, கோவில் ராஜகோபுரம், கொடிமரம், தேர்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.அருண்மொழிதேவன் எம்.பி., இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் ஜோதி, செயல் அலுவலர் முருகன், ஆய்வர் சிவஞானம், மங்களூர் ஒன்றிய சேர்மன் கந்தசாமி, பேரூராட்சி சேர்மன் நீதிமன்னன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar