Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் ... திருவாதிரை பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் மார்கழி திருவிழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
11:01

நாகர்கோவில் : சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில். இங்கு சிவன்,பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் மூலவராக இருந்து அருள் பாலிக்கின்றனர். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை மாதங்களில் பத்து நாள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா கடந்த மாதம் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் நாள் விழாவில் இரவு 11 மணியளவில் மக்கள்மார் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகரும், முருகபெருமானும் தங்கள் தாய் தந்தையான சுவாமி- அம்பாளை தரிசிக்கும் நிகழ்ச்சி மக்கள்மார் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது.

ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. மொத்தம் மூன்று தேர்கள் வலம் வந்தது. சிறுவர்கள் விநாயகர் தேரையும், பெண்கள் அம்பாள் தேரையும், ஆண்கள் சுவாமிதேரையும் இழுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளையும் சுற்றி வந்த போது பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி கும்பிட்டனர். தேரோட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar