பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவத்தில் பெருமாள் ஆண்டாள் சேர்த்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். கூடாரவல்லியையொட்டி மூலவர் பெருமாளுக்கும், ஆண்டாள் தாயாருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 6:30 மணியளவில் உற்சவர் பெருமாள் ஆண்டாள் சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் சுவாமி உள் புறப்பாடும், 8:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.