Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளத்தில் தண்ணீர்; பக்தர்கள் ... ஈஷா கொண்டாடிய பாரம்பரியம் மாறா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரவசப்படுத்திய "ஆன்மாவின் குரல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2015
12:01

திருப்பூர் : உமையாள்புரம் சிவராமன் தலைமையிலான குழுவினரின், "ஆன்மாவின் குரல் என்ற இன்னிசை நாட்டிய நிகழ்ச்சி, திருப்பூரில் நேற்று நடைபெற்றது; இசை அன்பர்கள் பரவசத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்.
ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 12ம் ஆண்டு "இசை அமுதம்-2015 நிகழ்ச்சி, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் ஐந்து நாட்கள் நடந்தது. நிறைவு நாளான நேற்று, "ஆன்மாவின் குரல் என்ற தலைப்பில், இசையும் நாட்டியமும் இணைந்த பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் தலைமையில், ஸ்ரீகாந்த் - வாய்ப்பாட்டு, விஜயராகவன் - வயலின், அனிருத்தா - நட்டுவங்கம், கார்த்திக் - கடம், திருவனந்தபுரம் ஹரிஹரன் ஆகியோரின் இன்னிசையில், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

ரோஜா கண்ணன், பிரியா முரளி ஆகியோர், இன்னிசை பாடலுக்கு ஏற்ப, அபாரமாக, அபிநயத்துடன் பரத நாட்டியம் ஆடினர். கடம் கார்த்திக் பாடிய, "முழுமுதற் கடவுளின் மலர் பாதம் பணிந்திட... விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. "காமகரிகபரிகஸா என்ற மேற்கத்திய ஜதியில், கர்நாடக இசைப்பாடல் இயற்றி பாடப்பட்டது; பரத நாட்டிய கலைஞர்கள், அப்பாடலுக்கு ஏற்ப அபிநயத்துடன் நாட்டியம் நிகழ்த்தினர்.

தொடர்ந்து, "ஓம் நமசிவாய...ஓம் நமசிவாய... என்று துவங்கிய அலாரிப்பு பாடல் பாடப்பட்டது. அப்பாடலில், சிவனும் பார்வதியும் சுழன்று ஆடி, தாண்டவம் நிகழ்த்துவதுபோல், பரத நாட்டிய கலைஞர்கள் ஆடினர். அடுத்ததாக, "மா மயூரம் மீது ஏறி வா.... என்னை ரக்ஷிக்க வா வா... என்ற பிலஹரி ராகத்தில் அமைந்த முருகன் மீது பாடப்பட்ட கீர்த்தனைக்கு ஆடினர்.முருக பக்தர்கள் வேண்டுதல் நடத்துவது போலவும், மயில் வாகனம் ஏறி முருகப்பெருமான் பறந்து சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போலவும், அப்பாடலுக்கு அபி நயத்துடன் ஆடினர். இன்னிசை ஸ்வரங்களுக்கு தகுந்தபடி, பாடல்களுக்கு, நாட்டிய கலைஞர்கள் அபாரமாக பரதம் ஆடியது, பார்வையாளர்களை பரவசப் படுத்தியது. நேற்று நடந்த "ஆன்மாவின் குரல் ஆடல் நிகழ்ச் சிக்கு, இசை அன்பர்கள் மத்தியில் அபார வரவேற்பு இருந்தது. முன்னதாக, டாக்டர் காயத்திரியின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar