Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தஞ்சையில் கருடசேவை கோலாகலம்! ஏழுமலையானுக்கு புதிய கார் காணிக்கை! ஏழுமலையானுக்கு புதிய கார் காணிக்கை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2011
10:06

சபரிமலை : ஆனி மாத பூஜைகள் முடிந்து, நேற்று சபரிமலை நடை அடைக்கப்பட்டது. கன மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜை, உற்சவம் போன்றவற்றிற்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், 10ம் தேதி மாலை அய்யப்ப விக்ரக பிரதிஷ்டா தினத்தை ஒட்டி நடை திறக்கப்பட்டது. மறுநாள் பிரதிஷ்டா தின உற்சவம் நடந்தது. அன்றிரவு நடை அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை நடை 15ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய வழக்கமான பூஜைகளில் நெய் அபிஷேகம், சந்தன அபிஷேகம் ஆகியவையும் நடந்தது. மேலும், சகஸ்ர கலச பூஜையும், அபிஷேகமும் மூலவருக்கு செய்விக்கப்பட்டது. இது தவிர, நேர்த்திக்கடன் சிறப்பு பூஜைகளாக படி மற்றும் உதயாஸ்தமன பூஜைகள் நடந்தது. கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு தரிசனம் செய்தனர். ஆனி மாத பூஜைகள் முடிந்து, நேற்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக, கோயில் நடை அடுத்த மாதம் (ஜூலை) 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்குப் பின், 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar