தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழாவில் 11 ம் நாளில் தெப்ப உற்சவம் நடந்தது. திருச்செந்தூரில் மாசித்திருவிழா நடந்து வருகிறது. பிப்.23 ல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 ம் நாள் தேரோட்டம் நடந்தது. 11 ம் நாளான நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் தெப்பகுளத்தில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின் இரவு 11 மணிக்கு தெப்பத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினர். பின் 11 முறை தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதன் பின்பு சுவாமிகள் ரத வீதியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் கோயில் வந்து சேர்ந்தார்.