பதிவு செய்த நாள்
07
மார்
2015
10:03
புதுச்சேரி: திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு, புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம், நல்லியகோடன் நகர், அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், வைத்திக்குப்பம் மாசிமகத்தில் பங்கேற்றார். வைசியால் வீதியில் உள்ள வாசவி திருமண நிலைய த்தில், சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. அலர்மேல் மங்கா தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெரு மாள் மாசிமகக் கடல் தீர்த்தவாரி கமிட்டி கவுரவத் தலைவர்கள் வேங்கடேச ராமானுஜதாசர், பொன்னுரங்கம் வரவேற்றனர். திருக்கல்யாண உற்சவத்தை, பட்டாச்சாரியார் கள் கண்ணன், சத்தீஷ், பார்த்தசாரதி, பாலாஜி ஆகியோர் நடத்தி வைத்தனர். விழாவில், சட்டசபை எதிர்கட்சித் தலை வர் வைத்திலிங்கம், கமிட்டி தலைவர் ஞானப்பிரகாசம், பொருளாளர் முனுசாமி, செயலாளர்கள் சுரேஷ், சிவானந்தம் மற்றும் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.