Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மா கோஷம் விண்ணை தொட.. பண்ணாரி குண்டம் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
மாரியம்மா கோஷம் விண்ணை தொட.. பண்ணாரி குண்டம் விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

07 ஏப்
2015
05:04

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து, மாரியம்மா, மாரியம்மா என, கோஷம் எழுப்பினர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், பங்குனி  மாதம், உத்திர நட்சத்திரம் அடுத்து வரும் செவ்வாய் கிழமை, குண்டம் விழா நடப்பது வழக்கம். இவ்விழாவில், தமிழகம், கேரளா, கர்நாடகத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் தீ மிதிப்பர். இந்த ஆண்டுக்கான குண்டம் விழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கி, 24ம் தேதி முதல், பண்ணாரி மாரியம்மன் சப்பரம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சென்றுவிட்டு, கடந்த, 3ம் தேதி பண்ணாரி கோவிலை அடைந்தது.
உடன் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல், அதிகாலை நடந்தது. நேற்று அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் பரப்பி வைக்கப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரத்துக்கு தீ வைத்து, அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. பண்ணாரி மாரியம்மன் (மூலவர்), கையில் வீணையுடன் அருள் பாலித்தார். அதிகாலை சரியாக, 3.45 மணிக்கு கோவிலின் தலைமை பூசாரி ராஜசேகர் தீ மிதித்தார். முன்னதாக, குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தார். ராஜசேகரை தொடர்ந்து, பூசாரிகள் ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் தீ மிதித்தனர். பின், சப்பரத்தை சுமர்ந்தபடி நால்வரும் தீ இறங்கினர். இவர்களை தொடர்ந்து கடந்த, 1ம் தேதி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar