Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிலை: ... செஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்! செஞ்சி மாரியம்மனுக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் பாதியில் நிற்கும் ராஜகோபுர பணி!
எழுத்தின் அளவு:
திருப்பூர் பாதியில் நிற்கும் ராஜகோபுர பணி!

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2015
11:06

திருப்பூர்:திருப்பூர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் ராஜகோபுரம் பணி பாதியில் நிற்கிறது; முழுமையாக செய்து முடிக்க, அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் நகரில், 1,200 ஆண்டுகள் பழமையானதும், பாடல் பெற்ற தலமாகவும், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் உள்ளது. பால மரங்கள் நிறைந்த மலையில், இது அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, நான்கு ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பணியின்போது, கோவிலுக்கு முன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த ராஜகோபுரம் பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.முழுவதும் கற்களால், மூன்று நிலை ராஜகோபுரம் பணி துவக்கப்பட்டு, இரண்டு அடுக்கு பணி மற்றும் சுதை வேலைப்பாடுகள் செய்யப்படாமல், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்காக கட்டப்பட்ட சாரங்கள், செதுக்கப்பட்ட கற்கள் அனைத்தும், கோவில் வளாகத்தில் வீணாக கிடப்பதால், பக்தர்கள் வேதனை அடைகின்றனர். பணியை உடனடியாக துவக்கி, விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "திருப்பணிக்குழு மூலம், உபயதாரர்கள் பங்களிப்புடன், ராஜகோபுரம் பணி துவங்கியது; சில காரணங்களால் தடைபட்டுள்ளது. உபயதாரர்களை மீண்டும் இணைத்து, நிதி திரட்டி, கோபுரத்தை முழுமையாக கட்ட நட வடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar