Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாரிடம் எதைக்கூற வேண்டும்? ஜன்னல் வழியாக கண்ணன் தரிசனம்! ஜன்னல் வழியாக கண்ணன் தரிசனம்!
முதல் பக்கம் » துளிகள்
கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா..
எழுத்தின் அளவு:
கேட்டதும் கொடுப்பவனே... கிருஷ்ணா... கிருஷ்ணா..

பதிவு செய்த நாள்

02 செப்
2015
05:09

எக்க சக்கமாக கும்பல் உள்ளேயும் வெளியுமாக போய்கொண்டிருக்கும் ஒரு பெரிய ஷாப்பிங் சென்டர் அது. அதன் வாசலில் ஒரு கண்ணாடி ஷோ ரூமில் நிறைய புது புது மாடல்களில் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது.அந்த கட்டிடத்தின் வாசலில் ஷோ ரூம் கண்ணாடி அறையின் வழியா உள்ளே இருக்கும் ஷூவெல்லாம் பார்த்துக்கொண்டே தெருவில் ஒரு 10 வயசு பையன் கன்னத்தில் கை வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தான். மார்கழி குளிரில் அவன் நடுங்கிக் கொண்டு இருந்தான். மேலே போர்வை இல்லை. காலில் செருப்புகூட இல்லஅவன் இருந்த இடத்துக்கு அருகே ஒரு பெரிய கார் வந்து அழகாக நின்றது. அதன் உள்ளேயிருந்து ஒரு பணக்கார பெண்மணி இறங்கினாள். அவள் பார்வை இந்த பையன் மேல் பட்டது.‘டே பையா, இந்த குளிரில் இங்கே என்னடா பண்றே, என்ன பார்க்கறே?‘ அவன் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் கண்ணாடி வழியாக உள்ளே பார்வையிட்டான்.

அப்படி என்ன உள்ளே இருக்கு பார்க்க என்ற ஒரு ஆவல் மேலிட கண்ணாடி வழியாக பார்த்தாள். உள்ளே நிறைய வித விதமான காலணிகள். ‘இதையே உற்று பார்க்க என்ன இருக்கு? அதுக்கு எதற்காக வாயில் ஏதோ முணுமுணுக்கறே? ‘கொஞ்சம் நேரம் முன்னாடி இங்கே ஒருத்தர் ஒரு விஷயம் சொல்லிண்டு போனார். அது பிரகாரம் பண்ணிண்டு இருக்கேன்.“என்னடா சொல்றே?, யார் என்ன சொன்னார்?‘ ‘ ஒரு தாத்தா பக்கத்திலே இருந்த மாமா கிட்ட ‘நீ கவலையே படாதே. உன்னுடைய குறையை அந்த கிருஷ்ணன் கிட்ட சொல்லிடு. அவன் பாத்துப்பான். உன் தேவையெல்லாம் பூர்த்தியாயிடும். இது என்னுடைய அனுபவம்‘ என்று சொல்லிக்கொண்டே போனார். அதனாலே நான் ரொம்ப நேரமா இந்த கிருஷ்ணன் என்கிறவர் கிட்ட எனக்கு ஒரு ஷூ வேணும்னு வேண்டிண்டு இருக்கேன்..“அப்படியா. சரி. என்னோட கொஞ்சம் வரியா ‘உள்ளே அவனை அழைத்துக் கொண்டு சென்று அரை டஜன் சாக்ஸ் வாங்கினாள். ‘சார் ஒரு டவல் தரிங்களா?‘ என்று கடைக்காரிடம் கேட்டு பணத்தை நீட்ட அது கிடைத்தவுடன் டாய்லெட் ரூம் சென்று அவனை நிற்கவைத்து குனிந்து அவன் முழங்கால் வரை அலம்பி, அழுக்கு, மண் எல்லாம் நீக்கி டவலால் துடைத்து சாக்ஸ் மாட்டினாள். அவன் கால் அளவுக்கு நல்ல புது விலையுயர்ந்த புது மாடல் ஷூவும் காலில் இணைந்தது. மீதி 5 ஜோடி சாக்ஸ் பொட்டலம் கட்டி பையில் போட்டு அவனிடம் நீட்டி முதுகில் தட்டி ‘இப்போ சந்தோஷமாடா?‘ கேட்டுவிட்டு நடந்தாள் அந்த பெண்மணி. போகின்றவள் கையை பிடித்து இழுத்து அவளை உற்று பார்த்த பையன் கண்களில் பிரவாஹம். அவன் வாயிலிருந்து ஒரு சந்தேக கேள்வி எழுந்தது ‘ நீ தான் கிருஷ்ணனோட அம்மாவா?‘ என்று.

நீதி: இறைவனை வேண்டினால் ஏதாவது ரூபத்தில் நமக்கு வேண்டியது கிடைப்பது நிச்சயம்!

 
மேலும் துளிகள் »
temple news
தல வரலாறுஇலஞ்சி என்னும் தேசத்தில் சங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் இந்த ... மேலும்
 
temple news
இந்திரன் பூஜித்த வரலாறு:ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் ... மேலும்
 
temple news
வல்லக்கோட்டை சுப்பிரமணிய பூஜைகள் கடந்த மாதம் 30ல் துவங்கியது.வல்லக்கோட்டை சுப்பிரமணியசு வாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கடந்த 1983-ல் சென்னையை சேர்ந்த அரசு உயர்அ திகாரியின் மனைவி தனது வீட்டில் உள்ள சிறிய கோவிலில் அம் மன் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar