கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், குழந்தை வடிவில் கண்ணன் காட்சி தருகிறார். தன் கணவர்குழந்தையாக இருந்த போது, எப்படி இருந்தார் என்று பார்க்க ருக்மணி ஆசைப்பட்டாள்.அதனால், தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் ஒரு கிருஷ்ண விக்ரகத்தைச் செய்தாள். அந்த விக்ரகமே உடுப்பியில் வழிபாட்டில் உள்ளது. இவர் மத்வாச்சாரியாரால் பூஜிக்கப் பெற்றவர். மத்வரின் கீர்த்தனை இங்கு பாடப்படுகிறது.இந்த கோவிலுக்கு வாசல் கதவுகள் இல்லை. ஜன்னலைப் போன்ற அமைப்புக் கொண்ட வழி மட்டுமே உண்டு. கர்ப்பகிரகத்தின் நுழைவுவாயிலை விஜய தசமியன்று மட்டுமே திறப்பர். மற்ற நாட்களில் சன்னிதியின் இருபுறமும் உள்ள ஜன்னல் வழியாக மட்டுமே தரிசிக்க முடியும்.