Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ... திருவண்ணாமலை கோவிலில் லெகிங்ஸ், ஜீன்ஸ் அணிய தடை! திருவண்ணாமலை கோவிலில் லெகிங்ஸ், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்தம் இன்று ஆரம்பம்!
எழுத்தின் அளவு:
ஆனந்தம் இன்று ஆரம்பம்!

பதிவு செய்த நாள்

01 ஜன
2016
11:01

2016ம் ஆண்டின் கூட்டுத்தொகை ஒன்பது. இந்த எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தின் அதிபதியான முருகனை ஆங்கில புத்தாண்டில்  வழிபட வேண்டும். அதிலும் மலையில் குடியிருக்கும் முருகன் என்றால் மிகவும் சிறப்பு. இந்த முருகன் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி  மலையில் அருள்புரிகிறார். வத்தலக்குண்டில் இருந்து 45 கி.மீ., தூரத்திலுள்ளது இவ்வூர். இங்குள்ள பால முருகனை வழிபட்டால் ஆண்டு  முழுவதும் ஆனந்தமான வாழ்வு அமையும்.

தல வரலாறு:
முருகப்பெருமான் ஆறாவது படைவீடான சோலைமலையில் தங்கியிருந்த பின், தாண்டிக்குடிக்கு எழுந்தருளினார். அகத்தியரின்  சீடரான இடும்பன் கைலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என் இரண்டு மலைகளை சுமந்து கொண்டு வருவதை அறிந்து, அந்த மலைகளில் ஒன்றைத்  தன் இருப்பிடமாக்கிக் கொள்ள இங்கிருந்து தாண்டிக் குதித்தார். இதன் காரணமாக இந்த தலம் தாண்டிக் குதி என்று அழைக்கப்பட்டது. காலப்÷ பாக்கில் தாண்டிக்குடி என மாறியது.

பன்றிமலை சுவாமி: பத்தொன்பதாம் சித்தர் என போற்றப்படும் பன்றிமலை சுவாமிகள் ஜோதி வடிவில் முருகனை இங்கு வழிபட்டு வந்தார். அதன்  அடையாளமாக முருகனின் திருவடி இங்குள்ள மண்ணில் பதிந்த அடையாளம் இங்குள்ளது. ஜோதி வடிவான பன்றிமலை சுவாமியின் பெயரால்  இவ்வூர் ஜோதிமலை என்றும் அழைக்கப்படுகிறது. அவரது வேண்டுகோளின்படி கோவில் கட்ட தேவையான பணம் பெறுவதற்கு பக்தர்களின்  கனவில் முருகனே கட்டளையிட்டு  திருப்பணி நடத்தப்பட்டது.  

சிறப்பம்சம்:
பழநியைப் போலவே இங்கும் முருகன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கணபதி, மயில், இடும்பன், பைரவர், அகத்தியர்,  நவக்கிரகங்களுடன் அமைந்துள்ள இக்கோவிலில் 1949 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தாண்டிக்குடி முருகனைத் தரிசித்த பின் பழநிக்குச் சென்றால்  முழு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பாறை ஒன்றில் வற்றாத தீர்த்தம் சுரக்கிறது. கோவிலில் இருந்து 75 அடி தூரத்தில் மண்மேட்டில் கிடைக்கும்  மண்ணே விபூதியாக தரப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவங்கள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar