Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் ... ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்! ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை அடைப்பு: பந்தளத்துக்கு புறப்பட்டது திருவாபரணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2016
11:01

சபரிமலை: மண்டல -மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவு பெற்று சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப்பட்டது. பந்தளம் மன்னர் பிரநிதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்த சடங்குகள் நடைபெற்றது.

Default Image
Next News

சபரிமலையில் கடந்த 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. 16 முதல் 20 வரை தினமும் இரவு ஏழு மணிக்கு படிபூஜை நடைபெற்றது. 19-ம் தேதி காலை 10 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று தொடர்ந்து மதியம் களபபூஜை நடைபெற்றது.20-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவுற்றது. பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெற்றது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறைப்படி இந்த பூஜையை நடத்தினர். நேற்று காலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம் கணபதிஹோமம் நடைபெற்றது. வழக்கமாக பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்பட்டு, அவரிடம் சாவி மற்றும் பணமுடிப்பு வழங்கப்படும். ஆனால் பந்தளம் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மரணம் காரணமாக மன்னர் பிரதிநிதி இந்த முறை திருவாபரண பவனியுடன் வரவில்லை. இதனால் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி காலை 6.30 மணிக்கு நடை அடைத்து சாவியை சபரிமலை நிர்வாக அதிகாரி சோமசேகரன்நாயரிடம் கொடுத்தார். இதை தொடர்ந்து திருவாபரணம் பந்தளத்துக்கு புறப்பட்டது. இனி மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்.,13-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar