கும்பகோணம் மகாமகவிழாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க துணிபை வழங்க ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2016 04:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமகத்தில் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து, பிளாஸ்டிக் இல்ல மகாமகம் நடந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மகாமகத்திற்கு பக்தர்கள், பொதுமக்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக துணிபை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 20 லட்சம் பைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பைகள் தயாரிக்கப்பட்டு தற்காலிக பஸ் ஸ்டண்ட், ரயில்வே ஸ்டேஷன், மகாமக குளம், பொற்றதாமாரை குளம் போன்ற பகுதிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.