Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர்கள் என்பவர்கள் யார்? பயம் போக்கி நல்வாழ்வு தரும் திவரிதா நித்யா! பயம் போக்கி நல்வாழ்வு தரும் திவரிதா ...
முதல் பக்கம் » துளிகள்
பக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?
எழுத்தின் அளவு:
பக்தியை வளர்த்துக்கொள்வது எப்படி?

பதிவு செய்த நாள்

02 மார்
2016
05:03

புழு, வண்டையே நினைத்து நினைத்து வண்டாகவே மாறிவிடுகிறது என்பர். இதனை பிரமகீடக நியாயம் என்று வேதாந்தம் கூறும். வெள்ளைத்  துணியை எந்த நிறச் சாயத்தில் தோய்த்து எடுக்கிறோமோ, அந்த நிறச் சாயத்தைத் துணி பெற்றுவிடுகிறது. சந்தனத்தை அரைக்க அரைக்க, சந்தனத்தின் நறுமணம் அதை அரைத்த கைக்கும் வந்து விடுகிறது. இறைக்க இறைக்கக் கிணறு சுரக்கிறது. சுடச்சுடப் பொன் ஒளிர்கிறது. இவைப்போல்  இறைவனை நினைக்க நினைக்க பக்தி வளர்கிறது. நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் இறைவன் பாலில் நெய்போல், விறகில் தீ போல் மறைந்திரு க்கிறான். பாலில் நெய் இருந்தாலும், விறகில் தீ இருந்தாலும் உரிய முயற்சியை மேற்கொண்டால் மட்டுமே அவை வெளிப்படும்.

ஜபம், தியானம், பிரார்த்தனை, சுவாத்தியாயம் (சாஸ்திரங்களைப் படித்தல்), சத்சங்கம் ஆகியவற்றுக்கு வாழ்க்கையில் நாம் தலையாய முக்கியத்துவம் தர வேண்டும். அகிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம் போன்ற ஒழுக்கங்களைப் பரிந்தோப்பி பேணிப் பாதுகாக்க வேண்டும். உணவு உழைப் பு, உறக்கம், உடலுறவு, எண்ணங்கள் ஆகியவற்றில் ஒழுங்கும் கட்டுப்பாடும் வரையறையும் இருக்க வேண்டும். இந்த ஐந்தில் எந்த ஒன்றைப்  புறக்கணித்தாலும், சரிவர ஆன்மிகச் சாதனைகளை மேற்கொள்ள முடியாது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், முயற்சி திரு வினையாக்கும், எறும்பூரக் கல்லும் தேயும், அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதெல்லாம், தொடர்ந்து மேற்கொள்ளும் பக்தி  வாழ்க்கைக்கும் பொருந்தும்.

 
மேலும் துளிகள் »
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar