ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மனத்தை சிதறவிடாமல் சொன்னால் சூரியபகவானின் மனம் திருப்தியாகி, நோயற்ற வாழ்வை அளிப்பார். இதை சொல்பவர்களுடைய புண்ணியம் எல்லையில்லாமல் விருத்தி அடையும். எதிரிகளை நாசம் செய்யும். சகல செயல்களிலும் வெற்றி தரும் அழிவில்லாத பலத்தைத் தருவதுடன் மனித மனங்களை பரிசுத்தம் செய்யும். எல்லா நலன்களும் உண்டாகும். இதற்கு முன் செய்த பாவங்களையும் அழிக்கும். மனக்கவலை நீங்கும். ஆயுள்காலம் விருத்தியாகும்.