Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாரூர் மூலாதார கணபதி இடிபகவான் பூஜை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மகன் மனைவியுடன் கணபதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2011
11:09

விநாயகப் பெருமான் தென்னகத்தைப் பொறுத்தவரை பிரம்மசாரி. ஆனால் அவரோ வடநாட்டில் திருமணம் செய்துகொண்ட இல்லறவாசி. அதுவும் சில தலங்களில் அவர் தம் மனைவி, மகன்களுடன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பானது. இத்தகைய ஒரு இடம் ராஜஸ்தான் மாநிலம் ரண்தம்பூர் கோட்டையாகும். இது இம்மாநிலத்தின் சவாய் மாதேபூருக்கு அருகில் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கிறது. இங்கே இவர் தனது மனைவியரான சித்தி புத்தியுடனும் தன் மகன்களான சுபம், லாபம் என்ற இருவருடனும் குடும்ப சகிதமாய் அருளாட்சி புரிகின்றார். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ரண்தம்பூர் கோட்டை, சௌஹான் அரச வம்சத்தைச் சேர்ந்த ஹமீராவின் காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கியது. அப்போது கோட்டை மதில் சுவரின் ஒரு பகுதியில் சுயம்புவாகத் தோன்றியவரே வரசித்தி விநாயகர். இவருக்கு அரசர் ஹமீரா கோயில் ஒன்றைக் கட்டினார். இக்கோயில் பின்னர் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மக்கள் இன்று இவரை ரண்தம்பூர் கோட்டையின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ரண்தம்வார் என மரியாதையாக அழைக்கின்றனர். கோட்டை கோமகனான இவருக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை குறிப்பிட்டு, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டி கடிதங்கள் அனுப்புகின்றனர். பல மொழிகளில் எழுதப்பட்ட இந்தக் கடிதங்கள் தினமும் படிக்கப்பட்டு அவருக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. பக்தர்களின் கோரிக்கைகளை கடித வாயிலாக ஏற்று அவற்றை நிறைவேற்றும் வரப்பிரசாதியான இவருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar