Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் கோவிலில் தீபம் ஏற்றும் ... தொரவி கோவிலில் சங்கடகர சதுர்த்தி பூஜை தொரவி கோவிலில் சங்கடகர சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான மூலிகை ஓவியம்: அறநிலையத்துறை அலட்சியத்தால் அழியும் அவலம்!
எழுத்தின் அளவு:
பழமையான மூலிகை ஓவியம்: அறநிலையத்துறை அலட்சியத்தால் அழியும் அவலம்!

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
11:07

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, 150 ஆண்டுகள் பழமையான மூலிகை ஓவியங்கள், அறநிலையத்துறை பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பப்பட்டியில், 150 ஆண்டுகள் பழமையான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், இருதரப்பு பிரச்னையால், பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. கோவில் சுவற்றில், 150 ஆண்டுகளுக்கு முந்தைய மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு சுவற்றில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள், இன்றளவும் நிறம் மங்காமல் புத்தம் புதியது போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக, பிரகலாதன் கதை, மயிலுடன் முருகன், அரங்கநாதன் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களில், ஐந்து ஓவியங்கள் மட்டுமே ஓரளவு நன்றாக உள்ளது. மற்றவை, மழைநீரில் நனைந்து, சுண்ணாம்பு அரிக்கப்பட்டு, பாதி அழிந்த நிலையில் உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், அனைத்து ஓவியங்களும் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அரிய வகை ஓவியங்களை அரசு பாதுகாக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆராய்ச்சியாளரும், ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியருமான துரைசாமி கூறியதாவது: தொப்பப்பட்டி மாரியம்மன் கோவிலில் இருப்பவை, 150 ஆண்டுகளுக்கு முந்தைய மூலிகை ஓவியங்கள். இதேபோல், மெட்டாலா அடுத்த உரம்பு செல்லும் வழியில் உள்ள ஆனந்தாயிம்மன் கோவில் ஒன்றிலும், ஓவியங்கள் உள்ளன. அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில், 100 ஆண்டு கட்டடங்களையே பழமையானது, வரலாற்று சிறப்புமிக்கது என்று பாதுகாத்து வருகின்றனர். ஆனால், நம் நாட்டில் நூற்றாண்டு பழமையான பொருட்களை கூட, துணி துவைக்கிற கற்களாகவும், சாதாரண பொருட்களாவும் பயன்படுத்தி வருகிறோம். அரசு பழமையான பொருட்களை பாதுகாப்பதில் முயற்சி எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar