சிலருக்கு ஆபீசிற்கு போன உடனேயே தூக்கம் வரும். இவர்களை தூங்கு மூஞ்சி மற்றவர்கள் கேலி செய்வார்கள். இந்த அவச்சொல்லில் இருந்து மீண்டு பகல் தூக்கத்திற்கு பை சொல்ல இந்தப் பாடலைப் படியுங்கள். அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும் கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்பெயர்பல துதிசெய பெருந்தகை இருந்ததே பொருள்: மனமே! மனச்சோர்வு, உடல்சோர்வு இருக்கிறது என்ற எண்ணத்தை அடியோடு ஒழித்து விடுவாயாக. மீன்கள் விளையாடும் வயல்கள் சூழ்ந்ததும், வளம் நிறைந்ததும், விதவிதமான வளையல்களை அணிந்த உமையவளோடு வீற்றிருப்பதும், பல பெயர்களை உடையதுமான சீர்காழியில் வீற்றிருக்கும் பெருந்தகையான பிரம்மபுரீஸ்வரரைத் துதி செய்வாயாக.