திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2016 11:09
திருநகர், மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை நேற்று துவங்கியது.காலையில் உற்சவர் சித்தி விநாயகர் முன் மகா கணபதி ஹோமம் முடிந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் லட்சார்ச்சனை துவங்கியது. செப்.,4 வரை மாலை 6:15 மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. செப்.,5 காலை மகா கணபதி ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகளும், மாலையில் சுவாமி மூஷிக வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.