Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி ஐந்தாம் நாள் எவ்வாறு ... பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில் தரிசனத்தில் பாகுபாடா? கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவு!
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில் தரிசனத்தில் பாகுபாடா? கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவு!

பதிவு செய்த நாள்

06 அக்
2016
11:10

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக, பக்தர் ஒருவர் எழுதிய கடிதம் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,மதுரை கலெக்டர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டது. விஸ்வநாதன் என்ற பக்தர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு எழுதிய கடிதம்:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வழிபாடு நடத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. குடவரை பகுதியில் முருகன், விநாயகர், துர்க்கையம்மன் சுவாமி சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. குடவரையின் இடது, வலது புற பகுதியில் சிவன், திருமால் சுவாமி சிலைகள் உள்ளன. இலவச தரிசனத்தில் செல்வோர் முருகன், விநாயகர், துர்க்கையம்மனை தரிசிக்க முடியும். சிவன், திருமாலை பார்க்க, தரிசிக்க முடியாது.

சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோர் முருகன் உட்பட 5 கடவுள்களை வழிபடலாம். இலவச தரிசன முறையை பயன்படுத்தும் ஏழை பக்தர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசன கட்டணத்தில் செல்வோருக்கு, சம வாய்ப்பு அளிக்க வேண்டும். சிறப்பு தரிசன கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அனைத்து பக்தர்களும் இடையூறின்றி வழிபாடு நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார். இதை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு முன், உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) இளங்கோவன் சமர்ப்பித்தார். இதனடிப்படையில் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் ஏற்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலர் செல்லத்துரை ஆஜரானார். கோயில் கர்ப்பகிரகத்திலிருந்து எந்தெந்த பாதை வழியாக பக்தர்களை அனுமதிப்பது மற்றும் இடவசதியை விளக்கும் வரைபடத்தை சமர்ப்பித்தார். நீதிபதிகள்: இலவச தரிசனம் மற்றும் கட்டண முறையை பயன்படுத்துவோர் என யாரையும் புறக்கணிக்காமல், அனைவரும் சிரமமின்றி தரிசிக்கும் வகையில், வழித்தடம் ஏற்படுத்துவது பற்றி கோயில் பொறியாளர் மற்றும் அதிகாரிகளுடன் மதுரை கலெக்டர், கோயிலை ஆய்வு செய்து, நாளை (அக்.,7) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar