Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழு ஆண்டுகளுக்கு பின் அறநிலைய துறை ... உலக அமைதி வேண்டி நடை பயணமாக வந்த துறவி உலக அமைதி வேண்டி நடை பயணமாக வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் கோலாகலமாக நடக்குது வளைகாப்பு
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் தரும் துள்ளுமாரியம்மன் கோலாகலமாக நடக்குது வளைகாப்பு

பதிவு செய்த நாள்

22 அக்
2016
11:10

விருதுநகர்: விருதுநகர் மல்லாங்கிணர் செல்லும் சாலையில் 80 ஆண்டுகள் பழமையான துள்ளுமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

இங்கு புரட்டாசி பொங்கல் விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. பவுர்ணமி மற்றும் மாதாந்திர பூஜைகளும் நடைபெறுகிறது. புரட்டாசி அமாவாசை முடிந்து வளர்பிறை ஞாயிறு அன்று வளைகாப்பு உற்சவம் நடத்தப்பட்டது.

51 வகை சீர் வரிசை: பலம் படைத்தவள் காளி, மக்கள் ஜனம் பெருத்தவள் மாரி என உற்சாகமாக பக்தர்கள் கூறுவார்கள். ஒரு தாய் தன் கருவில் வளரும் குழந்தையை எப்படி பாதுகாக்கிறாளோ, அதுபோல் இவளை நாடி வரும் மக்களை பாதுகாத்து வருவதால் அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த கோயிலில் மட்டுமே அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதை காண உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடு பக்தர்களும் காணிக்கை அனுப்புகின்றனர். வளைகாப்பு பூஜையன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பெண் வீட்டார் சார்பாக பூஜாரி வீட்டில் இருந்து அம்மனுக்கு 51 வகையான சீர் வரிசை தட்டுகள் சுமந்து ஊர் சுற்றி கோயிலை வந்தடைவார்கள். ஐந்து வகையான சாதங்கள் தயார் செய்து அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறுகிறது.

குழந்தை வரம் வேண்டி:
கோயில் பூஜாரி சங்கர் கூறுகையில், “குழந்தை வரம் வேண்டுவோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வளையல்கள் வழங்கப்படும். மகப்பேறு பெற்ற பெண்கள் கருவுற்ற நாளில் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொண்டு, அவர்களுக்கு கோயிலிலே வளைகாப்பு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் குழந்தை வரம் வேண்டி ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு கோயில் சார்பாக வளைகாப்பு விருந்து நடைபெறும்,”என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar