பதிவு செய்த நாள்
31
ஜன
2017
11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூபாய் 48 லட்சத்து 97 ஆயிரத்து 566 ரூபாய் ரொக்கம், 23 கிராம் தங்கம் காணிக்கையாக கிடைத்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 18 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் 48 லட்சத்து, 97 ஆயிரத்து 566 ரூபாய் ரொக்கம், 23 கிராம் தங்கம், 3 கிலோ 780 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.