Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்றத்து பழனி ஆண்டவருக்கு நாளை ... காளஹஸ்தியில் இன்று கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீசார்
எழுத்தின் அளவு:
பழநி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீசார்

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
01:02

திண்டுக்கல்: பழநி தைப்பூசத் திருவிழா பாதுகாப்பு பணிக்காக ஒரு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி.,க்கள் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 50 பெண் போலீஸ் உட்பட 250 பேர் மாறுவேடத்தில் உள்ளனர். பழநி தைப்பூசம் நாளை (பிப்.,9) நடக்கிறது. இதில் பங்கேற்க அருகே உள்ள மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாட்டு பக்தர்கள் என பல ஆயிரம் பேர் இங்கு வந்து குவிந்து உள்ளனர். அருகில் உள்ள மாவட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சரண கோஷத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர்.

மூவாயிரம் போலீசார்:
பழநியில் அசம்பாவிதத்தை தடுக்க டி.ஐ.ஜி., கார்த்திகேயன், எஸ்.பி.,க்கள் தேஷ்முக் சஞ்சய்சேகர்(திண்டுக்கல்), ஜெயச்சந்திரன்(சிவகங்கை), பாஸ்கரன்(தேனி) ஆகியோர் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவு, காமாண்டோ படையினரும், சிறப்பு புலனாய்வு பிரிவினரும் உள்ளனர்.மாறுவேடத்தில் போலீசார்: பழநிக்கு வரும் பக்தர்களிடம் திருட்டு மற்றும் நகை பறிப்பை தடுக்கவும், சமூகவிரோதிகளை அடையாளம் காணவும் 50 பெண் போலீசார் உட்பட 250 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து பக்தர்கள் போர்வையில் கூட்டத்தில் உலா வருகின்றனர்.“இவர்களிடம் வாக்கி டாக்கி கிடையாது. வெறும் அலைபேசிகளை மட்டும் பயன்படுத்தி, சந்தேகப்படும் நபர்களை பின்தொடர்ந்து சென்று கண்டுபிடிப்பர். பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை” என போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar