கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) சொந்த வீடு வாங்குவீங்க! சுகமா இருப்பீங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2017 12:02
குடும்பத்தினர் மீது பாசம் மிக்க கும்ப ராசி நேயர்களே!
சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். செவ்வாய் பிப்.26க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருகிறார். இதனால் நற்பலன் வாழ்வில் அதிகரிக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் சிறக்கும். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சமூக மதிப்பு சுமாராகவே இருக்கும். குரு மார்ச் 10 வரை அனுகூலம் தரும் விதத்தில் இருக்கிறார். அதுவரை நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தி ஆகும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். அதன் பிறகு குருவால் மனக்குழப்பம், வீண் விரோதம் உருவாகலாம். குடும்பத்தில் குதுõகலமான சூழ்நிலை உருவாகும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும் பிப்.14,15ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். ஆனால் பிப்.,25,26ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அதனால் அதிக நெருக்கம் வேண்டாம் பிப்.18,19ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். பிப்.16ல் இருந்து மார்ச் 5 வரை அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். சூரியனால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். மூத்த சகோதரர்களின் ஆலோசனையும், பண உதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். பெற்றோர் உடல் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பிப்.26 வரை பிறரை நம்பி பணப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். மறைமுகப்போட்டி பிப்.26க்கு பிறகு மறையும். பிப்.9,10ல் எதிர்பாராத வகையில் வருமானம் இருக்கும். ராகுவால் அவ்வப்போது வீண் அலைச்சல் ஏற்படலாம். சிலருக்கு தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். தொழிலாளர்கள் எதிர்பார்த்த வகையில் சலுகைகள் கிடைக்கும்.
பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கப் பெறுவர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் பிப்.26க்கு பிறகு நற்பலன் பெறுவர். அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் உருவாகும். கோரிக்கை ஒவ்வொன்றாக நிறைவேறும். பிப்.19,20ல் முயற்சியில் வெற்றி காணலாம். இடமாற்ற பீதி மார்ச் 5க்கு பிறகு மறையும். ஆனால் நெருப்பு, ராணுவம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்கள் சுக்கிரன் சாதகமான நிலையில் காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் எளிதில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். விடாமுயற்சியால் விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் நற்பெயர் காண்பர். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும்.
மாணவர்கள் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் கிடைக்காமல் போகாது. கல்வி வளர்ச்சிக்கான நல்ல சூழ்நிலை அமைந்திருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். குரு பலத்தால் போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர்.
விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பர். குறிப்பாக நெல், கோதுமை, பழ வகைகள், கிழங்கு வகைகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து முடிக்க மாத பிற்பகுதி சாதகமாக அமைந்திருக்கும். பிப்.26க்கு பிறகு வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். நிலப்பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் நன்மதிப்பு கிடைக்கும். மாத பிற்பகுதியில் ஆன்மிகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிப்.16க்கு பிறகு அண்டை வீட்டாரின் வகையில் கருத்துவேறுபாடு உருவாகலாம். பிப்.21க்கு பிறகு திருட்டு பயம் நீங்கும். மார்ச் 2,3ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிப்.13, மார்ச் 11,12ல் சகோதரிகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: பிப்.13,19,20,21,22,23, 26,27, மார்ச் 2,3,9,10,11,12
கவன நாள்: பிப்.14,15, மார்ச்13 சந்திராஷ்டமம். இந்நாட்களில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபடவும்.
அதிர்ஷ்ட எண்: 1,3 நிறம்: சிவப்பு, நீலம்
பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவன் வழிபாடு நல்வாழ்வுக்கு துணை நிற்கும். சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். தினமும் குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »