Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி ... திருச்செந்தூரில் கந்தசஷ்டி துவக்கம் திருச்செந்தூரில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 அக்
2011
10:10

சபரிமலை : சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்டத்திருநாள் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மன்னர் சபரிமலைக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி சித்திரை நாள் மன்னர் காணிக்கையாக வழங்கியதாகும். இதனால் அவரது பிறந்த நாளையொட்டி ஒரு நாள் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அவரது பிறந்த நாள் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று கொண்டாடப் படுகிறது.

இதற்காக சபரிமலை நடை 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சசிநம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் நெய்யபிஷேகம் தொடங்கியது. மதியம் சகஸ்ர கலசபூஜையும், களபாபிஷேகமும் நடைபெற்றது. உச்சபூஜைக்கு பின்னர் பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

மாலை ஐந்து மணிக்கு நடை திறந்து 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் படிபூஜை நடைபெற்றது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு படிபூஜை நடத்தினார். இரவு ஒன்பது மணிக்கு அத்தாழபூஜை முடிந்து பத்து மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இனி மண்டல கால பூஜைக்காக நவ.,16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கும். டிச., 27 வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். மண்டலகாலத்துக்கான ஏற்பாடுகள் சன்னிதானத்திலும், பம்பையிலும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar