கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2017 02:03
கடமை உணர்வுமிக்க கன்னி ராசி அன்பர்களே!
சனி 3ம் இடத்தில் இருந்தும், கேது 6ம் இடத்தில் இருந்தும் நன்மை தர காத்திருக்கின்றனர். மற்ற கிரகங்கள் சாதகமான நிலையில் இல்லை. அதனால் முக்கிய முடிவுகளை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பொறுப்புகளை குடும்ப பெரியவர்களின் வசம் ஒப்படைத்தால் வெற்றிகரமாக முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும். ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும். சிக்கனம் கடைபிடிப்பது நல்லது. சூரியன் 7ம் இடத்தில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கலாம். சமூகத்தில் மதிப்பு சுமாராக இருக்கும். கேதுவால் ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடு உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சுபவிஷயத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மார்ச் 14, ஏப்.9,10,11ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொன், பொருள் சேரும். மார்ச் 20,21,22ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். அதே நேரம் ஏப்.5,6ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற பிரச்னை ஏற்படலாம்.
தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. புதிய முயற்சியில் குறுக்கிட்ட தடைகள் படிப்படியாக விலகும். மாத பிற்பகுதியில் மறைமுகப் போட்டி குறுக்கிடும். எனவே பகைவர் மீது ஒரு கண் இருப்பது நல்லது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்பட வில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச் 15,16,17, ஏப்.7,8,12,13ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். மார்ச் 25,26ல் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.
பணியாளர்கள் சுமாரான பலனைக் காண்பர். வேலைப் பளு சற்று அதிகமாக இருக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குறிப்பாக அரசு ஊழியர்கள் வேலையில் விழிப்புடன் இருப்பது அவசியம். ஏப்.3,4 ஆகிய நாட்களில் பணியிடத்தில் இனிய அனுபவம் உண்டாகும்.
கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்காது. உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் தட்டிப் பறிக்கப்படும்.
பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். அவர்களிடம் ஒதுங்கி இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தொண்டர்களின் வகையில் அதிக பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வீண் பொழுது போக்கை தவிர்ப்பது அவசியம்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஓரளவு வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். மார்ச் 23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். மார்ச் 18,19ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். மார்ச் 27,28,29 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் கிடைக்கும்.
நல்ல நாள்: மார்ச் 14,18,19,25,26,27,28,29, ஏப். 3,4,5,6,9,10,11
கவன நாள்: மார்ச் 30,31 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,6 நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கை, முருகனுக்கு விளக்கேற்றுங்கள். தினமும் காலையில் சூரிய வழிபாடு நடத்துங்கள். புதன் கிழமை பசுவுக்கு பசுந்தழை கொடுப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »