Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டில் செல்வ கடாட்சம் ... கோயில்களில் மனிதர்கள் திருமணத்தை நடத்துவது சரியா? கோயில்களில் மனிதர்கள் திருமணத்தை ...
முதல் பக்கம் » துளிகள்
பாவங்கள் போக்கும் லட்சுமி நாராயணர்!
எழுத்தின் அளவு:
பாவங்கள் போக்கும் லட்சுமி நாராயணர்!

பதிவு செய்த நாள்

15 மார்
2017
01:03

அக்காலத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது ஆந்திராவின் சித்தூர் பகுதி. இன்று இப்பகுதிக்கு உட்பட்ட வேப்பஞ்சேரியில் எழுந்தருளியுள்ளார், லட்சுமிநாராயணர். பல ஆண்டுகளுக்கு முன் வைணவ பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, புற்றுக்குள் தாம் இருப்பதாக லட்சுமி நாராயணர் சொன்னார். மன்னனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்படி அந்தப் புற்றை தேடிக்கண்டுபிடித்தனர். அப்போது அசரீரியாக, பக்தர்களின் பாவங்களைப் போக்க தாம் எழுந்தருளி உள்ளதாக குரல் வந்தன. அத்துடன் இந்தத் தலத்தை வேம்பஞ்ச ஹரி என்று அழைக்கவும் உத்தரவானது. வேம் என்றால் பாவம்; பஞ்சம் என்றால் ஐந்து; ஹரி என்றால் நாராயணன். வேம்பஞ்ச ஹரி என்பதுதான் இப்போது வேப்பஞ்சேரி என அழைக்கப்படுகிறது. பின்னர், மூன்றாம் குலோத்துங்க சோழனால் லட்சுமி நாராயணருக்கு முறைப்படி கோயில் கட்டப்பட்டது. மூலவருக்கு அணிவிக்கப்பட்ட மாலை சாளகிராமங்களால் ஆனது. இது நேபாள நைமிசாரண்யத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இடது மடியில் லட்சுமியை அமரவைத்து அணைத்தவாறு புன்னகைபுரிய சேவை சாதிக்கும் லட்சுமி நாராயணர், பக்தர்களின் சகல பாவங்களையும் போக்கியருள்கிறார். ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் வேப்பஞ்சேரி உள்ளது. சித்தூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar