Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆரோக்கிய அன்னை சிற்றாலய கொடியேற்று ... மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி மூலத்திருவிழா: இன்று பட்டாபிஷேகம் மதுரை மீனாட்சி அம்மன் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர் இன்றி ராமேஸ்வரம் கோயில் சன்னதி மூடல்
எழுத்தின் அளவு:
அர்ச்சகர் இன்றி ராமேஸ்வரம் கோயில் சன்னதி மூடல்

பதிவு செய்த நாள்

30 ஆக
2017
06:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அர்ச்சகர் இன்றி பல சன்னதிகள் மூடி கிடப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். புனித தலமான ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்தம், 22 தீர்த்தங்களை நீராடி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி இக்கோயிலுக்கும் தினமும் 30 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் வந்து நீராடி, தரிசனம் செய்கின்றனர்.

மூடல்: ஆனால் கோயிலில் அர்ச்சகர்கள், மணியம் (அர்ச்சகர் கண்காணிப்பாளர்), கைங்கேரியம்(சுவாமி, அம்மன் அலங்கரிப்பவர்), பாராமேன் (கோயில் காவலர்) உள்ளிட்டோர் 80 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், தற்போது 30 பேர் மட்டுமே பணியில் உள்ளதால் சேதுமாதவர், பைரவர், விசாலாட்சி அம்மன்,சந்திரசேகரர் சுவாமி சன்னதியில் அர்ச்சகர் இன்றி நிரந்தரமாக மூடியே கிடக்கிறது. மேலும் பள்ளி கொண்ட பெருமாள், காசி விஸ்வநாதர், தெட்சிணா மூர்த்தி சன்னதிகள் திறந்திருந்தாலும், உயர் அதிகாரிகள் வந்து சென்றதும் நடை மூடுவதற்கு முன்பு இச்சன்னதியை அர்ச்சகர்கள் மூடி செல்கி்னறனர். இதே போல் பாராமேன்கள் பாதுகாப்பில் ஈடுபடாமல் சொந்த அலுவல்களை கவனிக்கின்றனர். இதனால் தரிசனம் செய்ய வரும் வட, தென் மாநில பக்தர்கள் பல சன்னதிகள் மூடி கிடப்பதை கண்டு அதிருப்தி அடைகின்றனர்.

இதில் பெருமாள், காசி விஸ்வநாதர் சன்னதியில் பணிபுரியும் அர்ச்சகர்கள், தீபாரதனை நடத்தாமல் உட்கார்ந்திருந்தபடி பக்தருக்கு ஜடாரி(பெருமாள் பாதம் பொருந்திய கும்பம்) தலையில் வைத்தும், விபூதி கொடுத்து ஆன்மீக மரபு மீறும் அர்ச்சகர்கள் செயலை கண்டு பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். பிரசித்த பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் மூடி கிடக்கும் சன்னதியில் அர்ச்சகர் நியமித்து, ஆன்மீக மரபு மீறும் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் மீது இந்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறி்த்து ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி கூறுகையில்: அர்ச்சகர், மணியம் உள்ளிட்ட 32 பணியிடங்களை நிரப்ப இந்து அறநிலை ஆணையருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். விரைவில் ஊழியர்கள் நியமித்து சன்னதிகள் திறந்து பூஜைகள் நடத்தப்படும். சன்னதியில் பணி நேரத்தில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கைப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar