குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2017 04:09
காடுபட்டி: குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். அமைச்சருடன் வந்த ஆதரவாளர்கள் மற்றும் வி.ஐ.பிக்களால் காத்திருந்த பக்தர்களுக்கு குருவின் காட்சி கிடைக்காமல் போனது.
குருவித்துறை சித்திர ரதவல்லபபெருமாள் கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. (செப்.,2) காலை 9.23 மணிக்கு கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குருபகவான் இடப்பெயற்ச்சியானார். அதனை முன்னிட்டு பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், பாலாஜி, ராஜா அனைத்து ராசிகாரர்களுக்கு பரிகாரபூஜைகள் செய்ய காலை 6.00 மணிக்கு திருமஞ்சனம் சாத்தல். தொடர்ந்து புனிதநீர் குடங்களை வைத்து பரிகார மஹாயாக பூஜைகள் நடந்தது. பின்னர் சுயம்புவாக உள்ள குருபகவான், சக்கரத்தாழ்வார் சுவாமிக்கு பட்டர்கள் புனிதநீர் ஊற்றி அபிஷேக ஆராதனை செய்தனர். பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அமைச்சர், உதயக்குமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் மாணிக்கம், பெரியபுல்லான், தங்களது ஆதரவாளர்களுடன் வந்து சன்னதியை சூழ்ந்து கொண்டதால், மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் குருபகவானை தரிசிக்க முடியாமல் சென்றனர். உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா சத்யநாராயனா, வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மாது ஆகியோர் சாமிதரிசனம் செய்தனர். வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தபோதும் குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாததால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர். ஏ.டி.எஸ்.பி கார்த்திகேயன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.