இது தவறு என அறிவு முடிவெடுத்ததை மனம் பின்பற்றினால் அது நம் வசமிருப்பதாக பொருள். மீறி தவறு செய்தால் மனம் வசப்படவில்லை என்று பொருள். மனதை கட்டுப்படுத்தும் ஆற்றல் அறிவுக்கு தேவை. அதை இறையருளால் மட்டுமே பெற முடியும். அறிவில் இருந்து என்னை நல்வழிப்படுத்து என கடவுளிடம் வழிபடுங்கள். என் சிந்தை நீங்கா இறைவா போற்றி என திருநாவுக்கரசர் பாடியதை நினைவில் கொள்ளுங்கள்.