Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... கிணத்துக்கடவு சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பரவசம் கிணத்துக்கடவு சூரசம்ஹார விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கந்த பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

27 அக்
2017
11:10

திருப்பூர்: திருப்பூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவின் ஒருபகுதியாக, நேற்று திருக்கல்யாண உற்சவம், கோலாகலமாக நடைபெற்றது. காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமி, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, நேற்று மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், திருக்கல்யான வைபவத்தை கண்டு வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீராட்டு, சுவாமி திருமலைக்கு எழுந்தருளல் மற்றும் பாலிகை நீர்த்து சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சுப்ரமண்ய பெருமானுக்கு நேற்று காலை பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால், அபிஷேகம் நடந்தது. தொடந்து நடந்த சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவத்தை, ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவில், நல்லூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி, சுப்ரமணியர் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், அலகு மலை முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

பக்தர்கள் அதிருப்தி: பல்லடம், மாதப்பூரில் உள்ள முத்துக்குமார சுவாமி திருக்கோவிலில், நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது. உரிய ஏற்பாடு செய்யப்படவில்லை என்று, பக்தர்கள் அதிருப்தியுடன் கூறினர். இதனால், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண முடியாமல் வேதனைப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar