Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூலூரில் சரண கோஷங்களுடன் ஐயப்பன் ... திருத்தணி ஈஸ்வரன் கோவில்களில் ஜன 2ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குளங்களை தூர்வாரி வரும் இளைஞர் குழு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குளங்களை தூர்வாரி வரும் இளைஞர் குழு

பதிவு செய்த நாள்

27 டிச
2017
12:12

திருவண்ணாமலை: நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், நீர் துளிகள் இயக்க அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கிரிவலப்பாதையில் உள்ள குளங்களை தூர்வாரி, சேவை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், 365 தீர்த்த குளம் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது, 120 குளங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில், 100க்கும் மேற்பட்ட குளங்கள், தூர் வாரப்படாமல், புதர் மண்டி கிடக்கின்றன. கடந்த, ஒன்றரை ஆண்டுக்கு முன், நீர் நிலைகளை பாதுகாக்கும் நோக்கில், 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ராகவன் என்பவர் தலைமையில், நீர் துளிகள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கி, முதலில் பூமாந்தா குளத்தை தூர்வாரும் பணியை துவங்கினர். பின், அடுத்தடுத்து பல்வேறு குளங்களை தூர் வாரினர். தற்போது, தர்மராஜா குளத்தை தூர்வாரி வருகின்றனர். இதுகுறித்து நீர் துளிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன் கூறியதாவது: கிரிவலப்பாதையை சுற்றிலும், 365 குளங்கள் இருந்துள்ளன. ஒரு காலத்தில், ஒவ்வொரு நாளும், ஒரு குளத்தில் இருந்து நீர் எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து, பூஜை நடந்துள்ளது.

காலப்போக்கில் இது கைவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றியிருந்த பல குளங் கள் காணாமல் போய் விட்டன. தற்போது, 120 குளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள் ளன. கிரிவலப்பாதையில் உள்ள தீர்த்த குளங்கள், பல மகிமைகள் கொண்டவை. இதில் மூழ்கி குளித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பதால், முதற்கட்டமாக, எட்டு தீர்த்த குளங்களை தூர் வாரியுள்ளோம். தற்போது, தர்மராஜா தீர்த்த குளத்தை தூர்வாரி வருகிறோம். தூர்வாரப்பட்ட தீர்த்த குளங்களை பக்தர்கள் நீராடி செல்லும் வகையில், அனைத்து வசதிக ளையும், இந்து அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். தொடர்ந்து குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar