Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சேலம் சிவாலயங்களில் ஆருத்ரா ... இன்று ரமணர் ஜெயந்தி இன்று ரமணர் ஜெயந்தி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசனம்: நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசனம்: நாமக்கல் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
12:01

நாமக்கல்: மார்கழி திருவாதிரையை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபி ?ஷம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாமக்கல் அடுத்த, வள்ளிபுரம் வேதநாயகி சமேத, தான்தோன்றீஸ்வரர் கோவிலில், திருவாதிரை பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் காலை, சுவாமிக்கும், வேதநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 8:00 மணி முதல், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, அலங்கரிக்கப்பட்ட சிறப்பு தேரில் உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

* குமாரபாளையம், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். முக்கிய வீதிகளில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், உலா நடந்தது.

* ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், நடராஜர், சிவகாமசுந்தரி மற்றும் சுந்தரருக்கு சிறப்பு அபி?ஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து, திருவீதி உலா நடந்தது.

* பொத்தனூர், சக்தி விநாயகர் கோவிலில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மேல், சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த கூத்தபிரானுக்கு, அபிஷேகத்தை தொடர்ந்து, 4:30 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடந்தது. 6:00 மணிக்குமேல், சுவாமி வீதி உலா நடந்தது.

* ப.வேலூரில், பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் மடத்தில், நடராஜருக்கு தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்ண அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், தேங்காய்களை கொண்டு, சிவலிங்கம் அமைக்கப்பட்டது. காலை, 9:00 மணியளவில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு, திருக்கல்யாண உற்சவம், 10:00 மணிக்கு மேல், நடராஜர் திருவீதி உலா, மதியம், 1:00 மணியளவில் தீபாராதனை, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar