Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காரைக்கால் கடற்கரையில் தீர்த்தவாரி வால்பாறை துண்டுக்கருப்பராயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சலங்கை மாடுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2018
01:01

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவரடிபாளையம் கிராமத்தில், பூப்பொங்கலான நேற்று வீட்டிற்கு வரும் சலகை மாடுக்கு மஞ்சள் நீர் ஊற்றி மக்கள் வழிபட்டனர். கிணத்துக்கடவு அருகேயுள்ள தேவரடிபாளையம் கிராமத்தில், தை பொங்கல் நாளில் பசு கன்று ஈன்றால், அந்த மாட்டை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று, பசு உரியமையாரின் தாய்மாமன் வீட்டுக்கு மாட்டை அழைத்து செல்வது, வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. தாய்மாமன் வீட்டை சேர்ந்தவர்களுக்கு புத்தாடை கொடுத்து, விருந்து வைக்கப்படுகிறது. பின், மாட்டின் இரண்டு காதுகளையும்கத்தியால் கீறி, அந்த மாடு சாமிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மாட்டின் கழுத்தில் மஞ்சள் துணியை கட்டி, சலங்கை அணிவித்து, மஞ்சள் நீர் ஊற்றி,ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்து செல்லப்படுகிறது. அதன்படி, நேற்று பூப்பொங்கலன்று சலங்கை மாடுகள் ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்து செல்லப்பட்டன. சலங்கை மாடு வருவதற்காக காத்திருந்த மக்கள், அதன் மீது மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய பழம் வைத்து தீபராதனை காண்பித்து வழிபட்டனர். கிராமத்தில் இருந்து, கோதவாடி ஆல்கொண்ட திருமால் கோவிலுக்கு சலங்கை மாடு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு வழிபாட்டுக்கு பின்கிராமத்துக்கு திரும்ப அழைத்து வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 
temple news
பல்லடம்: செஞ்சேரிமலையில், தைப்பூச விழா வை முன்னிட்டு நடக்கவுள்ள தேர்த்திருவிழாவுக்கு, தங்கத்தேர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, ... மேலும்
 
temple news
திருநின்றவூர்: திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar