Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச திருநாளில் வடலுாரில் தீபம் சந்திர கிரகணம்: கோவில்களில் நடை அடைப்பு சந்திர கிரகணம்: கோவில்களில் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரத்தில் தைப்பூச விழா: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
ராமநாதபுரத்தில் தைப்பூச விழா: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

31 ஜன
2018
03:01

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் அக்ரஹாரம், சிவன் கோயிலில் உள்ள முருகன் சன்னிதியில் தைப்பூசத்தை முன்னிட்டு, சுவாமி முருகனுக்கு ராஜ அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் வடக்குத்தெரு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன., 29 காப்பு கட்டுதல் நிகழச்சியுடன் துவங்கியது. ஜன.30 ல் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அன்று இரவு 7:30 மணிக்கு சுவாமியின் வீதியுலா நிகழச்சி நடந்தது. காலை 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனத்துடன் துவங்கியது. பின் மகா கணபதி ேஹாமம், சுப்பிரமணியர் ேஹாமம், துர்க்கா ேஹாமம், லட்சுமி, நவக்கிரக ேஹாமங்கள் நடந்தது. காலை 11:30 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி பவனி வந்தது. பின் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:45 க்கு மங்கள தீபாரதனையை தொடர்ந்து சந்திர கிரஹனத்தை முன்னிட்டு கோயில் நடை சாத்தப்பட்டது.

* குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயிலில் காலை 6:30 மணிக்கு திருமஞ்சனம், விநாயகர் பூஜை நடந்தது. பக்தர்கள் சொக்கநாதசுவாமி கோயிலில் இருந்து பால்குடம், காவடி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர். காலை 9:45 க்கு சுவாமிக்கு பால் அபிஷேகம்,  அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை நடந்தது. உற்சவ மூர்த்திக்கு மகா அபிஷேகம், தீபாரதனை நடந்தது. பகல் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.

* வழி விடு முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். சுவாமிக்கு மகா அபிஷேகம், அல்ஙகாரம், தீபாரதனை நடந்தது.  இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar