Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பூட்டியே கிடக்கும் தூண் மண்டபம் ... திருமலையில் பிப்., 25 முதல் ஆர்ஜித சேவை ரத்து திருமலையில் பிப்., 25 முதல் ஆர்ஜித சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: பிப்.22ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: பிப்.22ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2018
10:02

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா பிப்.22ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், இங்கு முதியவர் கனவில் வந்த தேவி ,தனக்கு இங்கு ஒரு கோயில் கட்டும்படி கூறியதாகவும் ஸ்தலவரலாறு கூறுகிறது.

இதன் அடிப்படையில் கிள்ளியாற்றின் கரையில் கட்டப்பட்ட தேவி கோயில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு திருவிழா காலங்களில் முக்கிய நிகழ்வாக தோற்றம் பாட்டு என்ற கண்ணகி வரலாறு பாடப்படுகிறது.இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாவான பொங்கல் திருவிழாவில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான பெண்கள் கோயிலை சுற்றி பல கி.மீ. துாரத்தில் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா பிப். 22ம் தேதி மாலை 5:30 மணிக்கு அம்மனை காப்புக்கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 24ம் தேதி காலை 8:45 மணிக்கு குழந்தைகளின் குத்தியோட்ட விரதம் தொடங்கும்.மார்ச் 2ம் தேதி காலை 10:15 மணிக்கு பொங்கல் அடுப்பில் தீ மூட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. கோயில் முன்புறம் உள்ள அடுப்பில் கோயில் மேல்சாந்தி தீ மூட்டியதும், மற்ற பொங்கல் அடுப்புகளில் தீ மூட்டப்படும். மதியம் 2:30 மணிக்கு பொங்கல் நிவேத்யம் நடைபெறும். மார்ச்3ம் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு கட்டிய காப்பு அவிழ்க்கப்பட்டு, இரவு 12:00 மணிக்கு குருதி தர்ப்பணம் நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது.இந்த ஆண்டு பொங்கல் விழாவில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar