Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமளம் பெருமாள் கோவிலில் புதிய தேர் ... உலகலாம்பூண்டி கோவில் கும்பாபிஷேக விழா உலகலாம்பூண்டி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா ஏற்பாடு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா ஏற்பாடு

பதிவு செய்த நாள்

08 பிப்
2018
12:02

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 13ல், மஹா சிவராத்திரி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.திருவண்ணாமலையில், வரும், 13ல், மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

லட்ச தீபம் : பின், அதிகாலை, 5:00 மணி முதல் பகல், 12:00 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும், லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுவர். பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில் தீபங்கள் ஏற்ற, பாதுகாப்பு கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மஹா சிவராத்திரி இரவில், நான்கு கால பூஜை நடக்கும். மஹா சிவராத்திரி உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, கோவில் கலையரங்கத்தில், மாலை, 6:00 மணி முதல் விடிய, விடிய தேவார பாடல்கள் இன்னிசை, பரத நாட்டியம் மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணி : பொது தரிசனம், கட்டண தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும். சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar