Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகி கோயிலை சீரமைக்க தொல்லியல் ... இள்ளலுார் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை இள்ளலுார் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2018
11:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இன்று(பிப்.20) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவை முன்னிட்டு, அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் இரண்டாம் பிரகார கொடிமரத்தில் 5:30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி நடக்கிறது. 12 நாட்கள் நடக்கும் விழாவில், காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 5ம் நாள் 24ம் தேதி சிவன் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை, 26ம் தேதி அதிகாலை சண்முகபெருமான் உருகு சட்டசேவை, மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலா, 27ம் தேதி அதிகாலை சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி உலா, பகலில் பச்சை சாத்தி சப்பரத்திலும் வீதி உலா வந்து கோயிலை சேருகின்றனர். மார்ச் முதல் தேதி அதிகாலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 2 இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச் 3 மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டவீதி உலா நடந்தது.இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் ராஜகோபுரம் சேதமடைந்ததை அடுத்து கோயிலில் நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று இலகு ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி இன்று காந்திமதி அம்மன் தவழ்ந்த ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் ரோடு, பள்ளக்காட்டுப்புதுார் பரமசிவன் கோவிலில் உள்ள மந்திரகிரி ... மேலும்
 
temple news
அன்னூர்; 150 ஆண்டு பழமையான மதுர காளியம்மன் கோவில் திருப்பணி வேகமாக நடைபெறுகிறது. அன்னூர் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar