Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? பங்குனி முகூர்த்த நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2018
02:03

* குடும்பத்தின் தலைவனாக தந்தை இருப்பது போல, கடவுள்  எல்லோருக்கும்
தந்தையாக இருக்கிறார். நாம் அனைவரும் உடன் பிறந்தவர்கள்.
* சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். வீடு  குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். பெற்றோரே  ஆசிரியர்கள்.
* சிறு வயதில் மனதில் உருவாகும் கருத்தும், நடக்கும் சம்பவமும் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
* பெற்றோருக்கும், பிள்ளைக்கும் உள்ள உறவு தெய்வீகமானது. “அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்” என்பதை கற்று கொடுக்க வேண்டும்.
* தலைமுறை இடைவெளி காரணமாக குடும்பத்தில் பிணைப்பும், அன்பும் குறைய
அனுமதிப்பது கூடாது. அன்பே குடும்பத்தின் அஸ்திவாரம்.
* குழந்தை வளர்ப்பு  ஒரு கலை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக பிள்ளைகள் விளங்க, பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
* குழந்தைகளுக்காக பெற்றோர்  தினமும் சிறிது நேரம் செலவிடுவது அவசியம். இதனால் குழந்தைகளின் மனம் ஆரோக்கியமாக இருக்கும்.
* நாளைய பொழுது நலமாக அமைய விரும்பினால், கண் முன் இருக்கும் இன்றைய
கடமையை சரிவர செய்யுங்கள்.
* நேற்றைய இளைஞர்கள் இன்றைய முதியவர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய
முதியவர்கள். இந்த உண்மையை உணர்ந்தால் பெரியவர்களை மதிக்கும் பண்பு உருவாகும்.
* மரியாதை என்பது தானாக கிடைக்க வேண்டியதே தவிர, கேட்டு பெறுவது அல்ல.
* உடலில் ஆரோக்கியம், மனதில் துணிச்சல் நிறைந்த இளமைக் காலமே, லட்சியம்
நோக்கிய வெற்றி பயணத்திற்கு ஏற்றது.
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு கலங்க வேண்டாம். பிரச்னைகள் உந்துசக்தியாக இருந்து, நம்  வளர்ச்சிக்கு துணை செய்கின்றன.
* தகுதி, திறமை இரண்டையும் கல்வி மூலம் வளர்த்து கொண்டால், முன்னேற்றத்தி ற்கான கதவுகள் திறப்பதைக் காண்பீர்கள்.
* அறிவாளிகள் பணத்தை புறக்கணிப்பது இல்லை. அதற்காக பணம் ஒன்றே வாழ்க்கை என்ற முட்டாள் தனத்தையும் ஏற்பது கூடாது.
* மேலைநாட்டு மோகத்தால் பண்பாட்டை மறந்து விட்டோம். நாகரிகம் என்ற பெயரால் ஆடம்பரமாக வாழ்வதே மகிழ்ச்சி என கருதும் போக்கு வந்து விட்டது.
* இந்திய பண்பாட்டை காப்பது நம் கடமை. பிற நாட்டவரிடம் உள்ள நல்ல விஷயங் களை ஏற்கவும்  தயங்க  கூடாது.
* மனிதன் தனித்தன்மையை இழப்பது நல்லதல்ல. இதையே “நீ நீயாகவே இரு” என்று முன்னோர் சொல்லி வைத்தனர்.
* நேர்மையும், விடாமுயற்சியும் மனிதனுக்கு அவசியம். செய்யும் தவறுகளால் எதிர்காலம் கேள்வியாகும் என்ற தெளிவு இருந்தால் தவறுகள் நேர்வதில்லை.
* தீயபழக்கம் முதலில் ஒட்டடை நூல் போல ஆரம்பிக்கும். ஆனால், முடிவில் வடக் கயிறு போல கடினமாகி விடும்.  சொல்கிறார் ஹர்ஷானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar