Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சையில் 24 கருட சேவை உற்சவம் தஞ்சை பெரிய கோவிலில் இடி தாக்கி நுழைவு வாயில் சிற்பம் சேதம் தஞ்சை பெரிய கோவிலில் இடி தாக்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு புண்ணாக்கு பிரசாதம் : 8ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பக்தர்களுக்கு புண்ணாக்கு பிரசாதம் : 8ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2018
05:06

ஆத்துார்: கோவிலில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு, புண்ணாக்கு பிரசாதம் வழங்கியதற்கு ஆதாரமாக, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை, வெள்ளிக்கவுண்டனுார் என்ற இடத்தில், கி.பி., எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த, செக்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த, 2ல், புழுதிக்குட்டை பகுதியில் உள்ள, கரியராமர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டபோது, கல் செக்கில் ஒரு கல்வெட்டு கண்டறிந்து ஆய்வு செய்தனர்.   

இதுகுறித்து, வரலாற்று மைய ஆய்வாளர்கள் கூறியதாவது: தரையிலிருந்து, கல் செக்கானது, 40 செ.மீ., உயரம் உள்ளது. செக்கின் உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில், 12 வார்த்தைகளில் கல்வெட்டு எழுத்துகள் உள்ளன. இவை, எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்தவை. விளக்கமாறன், தன் மகன் மூக்கனன் இறந்து விட்டதால், அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இது. இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு, பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்று துண்டுகள் தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகத்தில், ஸ்ரீவிளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனாற்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று என்று எழுதப்பட்டுள்ளது. பழங்காலத்தில், நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணையை எடுத்துக்கொண்டு, கல்செக்கு கூலியாக புண்ணாக்கை தரும் வழக்கம் உண்டு. இப்போது கண்டறியப்பட்டுள்ள, கல்செக்கு கல்வெட்டு மூலம், இங்கு வந்து வழிபடுவோருக்கு பிரசாதமாக, பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தர சொல்லியிருப்பது ஒரு புதிய தகவலாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar