உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள். ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகமாக விரும்பினால் அது உன்னை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றி விடும். கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள். ஒன்றுபட்ட கூட்டத்தினர் மீதே அல்லாஹ்வின் உதவி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் ஒன்றுபட்டவர்களாக ஆகி விடுங்கள். நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான். பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன. அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர். – நபிகள் பொன்மொழிகள்