பதிவு செய்த நாள்
14
செப்
2018
12:09
நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறும் துலாம் ராசி அன்பர்களே!
சுக்கிரன், சனீஸ்வரர் இருவரும் நன்மை தரும் நிலையில் உள்ளனர். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் சீராக இருக்கும். வீண்செலவை குறைப்பது நல்லது. சமூகத்தில் மரியாதைக்கு எந்த பாதகமும் ஏற்படாது.
குருபகவான் தற்போது சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அக்.4 க்கு பிறகு நற்பலன் கொடுப்பார். அப்போது அவர் 2-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை குருவால் ஏற்பட்ட சிரமம் அனைத்தும் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவிய குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். குருபகவானால் உங்களது ஆற்றல் மேம்படும். மந்தநிலை மறையும். மனதில் துணிச்சல் பிறக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். புதிய வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் சுக்கிரனின் பலத்தால் பொன், பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.3க்கு பிறகு குடும்பத்தில் சிறு பிரச்னைகள் உருவாகி மறையும். அக்.6,7ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பணியாளர்களுக்கு சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சூரியனால் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தனியார் துறையில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். பதவி உயர்வுக்கு தடை ஏற்படாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குருவால் அக்.4க்கு பிறகு பணியிடத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும்.
அக்.4,5ல் எதிர்பாராத நன்மையைக் காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சனிபகவான் பொருளாதார வளம், தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் வளர்ச்சி அடையும். புதனால் எதிரி தொல்லை வந்தாலும் அவர்களின் முயற்சி தோல்வி அடையும். ராகுவால் அவப்பெயர் சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அக்.8,9,12,13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். செப்.25,26ல் அதிர்ஷ்டவசமாக வருமானத்தை எதிர்பார்க்கலாம். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
கலைஞர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் அந்தஸ்துடன் இருப்பர். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சுமாரான பலன் கிடைக்கப் பெறுவர். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்காது. செப்.22,23,24ல் மனக்குழப்பம் ஏற்படலாம். செவ்வாயால் அவ்வப்போது பிரச்னையை சந்திக்க நேரலாம் கவனம்.
மாணவர்கள் விடாமுயற்சியால் முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் அறிவுரையை பின்பற்றுவது நன்மையளிக்கும் அக்.4க்கு பிறகு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். போட்டிகளில் வெற்றி உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனையும் வளர்ச்சிக்கு துணைநிற்கும். விவசாயிகளுக்கு நல்ல காலகட்டமாக அமையும். குறிப்பாக கறுப்பு நிற தானியம், சோளம், மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலை கொடுக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்களுக்கு குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சகோதரிகள் உறுதுணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன் காத்திருக்கிறது. சிலருக்கு புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். அக்.4க்கு பிறகு வீட்டினுள் பிரச்னை குறுக்கிடலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அண்டைவீட்டார் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். செப்.17,18,19, அக்.15,16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். செப்.27,28 அனுகூலமான நாட்களாக அமையும்.
* நல்ல நாள்: செப்.17, 18, 19, 25, 26, 27, அக்.4, 5, 6, 7, 10, 11, 15, 16
* கவன நாள்: செப்.29, 30, அக்.1 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: கருப்பு, வெள்ளை
பரிகாரம்:
● தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● அதிகாலையில் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
● வெள்ளிக்கிழமையில் ராகுவுக்கு அர்ச்சனை