Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுக ... துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) கவுரவம் துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) நன்மை
எழுத்தின் அளவு:
கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) நன்மை

பதிவு செய்த நாள்

14 செப்
2018
12:09

பிறர் துன்பம் கண்டு இரங்கும் கன்னி ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் சுக்கிரன், ராகு தொடர்ந்து நன்மை செய்வார்கள். இந்த மாதத்தை பொறுத்தவரை குருபகவான் அக்.4 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். அதன் பிறகு அவர் 3-ம் இடமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக குரு 3-ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு  கிடைக்காது. உங்கள் நிலையில் தடுமாற்றம் ஏற்படலாம். அதற்காக அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் அனைத்து பார்வைகளும் சாதகமாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை பலத்தால் உடைத்து எறியலாம்.

சுக்கிரன், ராகுவால் செயலில் வெற்றி உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். பெண்கள்  உறுதுணையாக இருப்பர்.  சமூகத்தில் மரியாதை கூடும். அரசு வகையில் நன்மை ஏற்படும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்க்கவும். புதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னை, உறவினர் வகையில் கருத்துவேறுபாடு, பொருள் இழப்பு முதலியன அக்.3க்கு பிறகு மறையும். அதன் பிறகு உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். அக்.8,9ல் பெண்களால் உதவி கிடைக்கும்.     

பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். சுக்கிரனால் அரசு ஊழியர்களின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. குருவால் விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். அக்.2,3 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.  ஆனால் அக்.4க்கு பிறகு கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சல் ஏற்படும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். பொறுமையும், நிதானமும் தேவை.  

தொழில், வியாபாரத்தில் சூரியனால் கடந்த மாதம் ஏற்பட்ட பொருள் விரயம், தொழிலில் நஷ்டம் முதலியன இனி இருக்காது. இந்த மாதம் சுக்கிரனால் தொழில் விருத்தி அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். புதிய வியாபார முயற்சியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குருவால் பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

செப். 22,23,24ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அதிர்ஷ்டவசமாக திடீர் பணவரவு இருக்கும். அக்.6,7,10,11ல் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி அடைவர். புகழோடு வருமானம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.  சமூகநல சேவகர்கள் மக்கள் மத்தியில் மதிப்புடன் திகழ்வர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. சிலருக்கு அவப்பெயர் ஏற்படலாம் கவனம். ஆனால் குருபலத்தால்  ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவர். அதிக முதலீடு தேவைப்படும் விவசாய பயிரை தவிர்க்கவும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடும். கால்நடைகள் வளர்ப்பின் மூலம் விரும்பிய பலன் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. வழக்கு,விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் நல்ல முறையில் பூர்த்தியாகும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர். அக்.12,13,14ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.

* நல்ல நாள்: செப்.22, 23, 24, 25, 26, அக்.2, 3, 4, 5, 8, 9, 12, 13, 14
* கவன நாள்: செப்.27, 28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4, 7 நிறம்:வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
●  அதிகாலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  புதன்கிழமையில் குலதெய்வ தரிசனம்
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar