Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
4. திருநெல்வேலி இசைத்தூண்கள்:
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள்
5. சுசீந்திரம் இசைத்தூண்கள்:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

சுசீந்திரம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி. இங்குள்ள தாணுமாலயன் கோயிலும், இசைத்தூண்கள் உள்ளன. இக்கோயிலின் முன் உள்ள பெரிய மண்டபத்தை உருவாக்கியவர்கள் பேரூர் முத்துச்சாமி பிள்ளை வகையினர் ஆவார்கள். இம்மண்டபம் கி.பி 1548ல் கட்டி முடிக்கப்பட்டதாக இக்கோயில் சாசனங்கள் கூறுகின்றன. இங்கு வடக்குப் பிராதரத்தில் கால பைரவர் சன்னதிக்கு எதிரே இசைத்தூண்கள் நான்கு காணப்படுகின்றன. வடக்குப் பக்கத்து தூண்கள் ஒவ்வொன்றிலும் 24 சிறு உருட்டுக்கம்பிகள் உள்ளது. தென்பக்கத்துத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 35 உருட்டுக்கம்பிகள் உள்ளது. இந்த உருட்டுக்கம்பிகள் அடியில் சதுரமாகவும் மேலே எட்டுப்பட்டைகள் உள்ளனவாகவும் புரிகள் உள்ளனவாயும் இருக்கின்றன. இந்தத் தூண்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் உடன் மிக கம்பீரமாக காணப்படுகின்றன. இக்கோவிலில் உள்ள ஏட்டுச்சுவடுகளில் இம்மண்டபமும், இசைத்தூண்களும் கி.பி 1798 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகக் காணப்படுகின்றன. இந்த இசைத்தூண்கள் சுத்தமான சுர ஒலிகளைத் தருகின்றன. இதில் எழும் சுரஒலிகளைச் செவிமடுத்த இசைப்புலவர்கள் இத்தூண்களில் பிறக்கும் நாதம் சுத்தமாகவும் இனிமையாகவும் இருக்கின்றன என்று இயம்புகின்றார்கள்.

நமது சென்னைப் பல்கலைகழக அன்றைய வரலாற்றுத்துறை தலைமைப் போராசிரியர் டாக்டர் திரு.கே.கே. பிள்ளை சுசீந்திரம் கோவில் என்ற ஆங்கில நூலில் இசையின் இனிமையிலும் சிற்ப நுட்பங்களிலும் இந்த இசைத்தூண்களுக்கு நிகரான தூண்கள் வேறு எங்கும் பார்ப்பது அரிது எனப் புகழ்மாலை சூட்டியுள்ளார்கள். அத்தோடு நாம் அறிந்தவற்றில் இது திருநெல்வேலி இசைத்தூண்களுக்கு ஒப்பானது. பாண்டிய நாட்டின் இசைக் கருவூலங்களில் இணையற்ற மணிகள் பதித்து அணிகலாக இந்த இசைத்தூண்களும் மதிக்கத்தக்கனவாகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »
பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு மட்டுமல்ல. இயல், இசை, நடனம் என்னும் முத்தமிழினையும் வளர்த்த ... மேலும்
 
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப்புலவர்கள் அனைவராலும் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பகராமன் நல்லூர் என்று ஒரு சிற்றூர் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் ... மேலும்
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar