Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) சேமிப்பு கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குதூகலம்
எழுத்தின் அளவு:
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குதூகலம்

பதிவு செய்த நாள்

19 அக்
2018
03:10

பிறர் நலனில் அக்கறை காட்டும் மிதுன ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன் நற்பலன் தரக் காத்திருக்கிறார். புதன் அக்.24 முதல் நவ.13 வரை சாதகமான இடத்தில் இருக்கிறார். இந்த காலத்தில் பின்தங்கிய பொருளாதார நிலை சீர்படும். ஆடம்பர வசதிகள் பெருகும். தடைகள் படிப்படியாக விலகும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.  சுக்கிரனால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பணலாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பொன், பொருள் சேரும். வீட்டுக்கு தேவையான வசதிகள் குறைவின்றி கிடைக்கும். சமுகத்தில் மரியாதை உயரும்.   அக்.24 முதல் நவ.13 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.29,30ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.24,25,26ல் உறவினர்கள் வருகை இருக்கும்.  அவர்களால் நன்மை கிடைக்கும்.  நவ.4,5ல் உறவினர்கள் வகையில் வீண்பகை ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். நவ.13க்கு பிறகு தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் மிக ஆதரவுடன் செயல்படுவர். பணி விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் அக்.23க்கு பிறகு மீண்டும் சேருவர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் நல்ல வளர்ச்சி காணலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.  
அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். அக். 22,23 ஆகிய நாட்கள் அனுகூலமானதாக இருக்கும். நவம்பர் 13-ந் தேதிக்கு பிறகு பணிச்சுமையை சுமக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு இட, பணிமாற்றம் கிடைக்கலாம். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும்.

தொழில், வியாபாரத்தில் ஆன்மிகம் மற்றும் பூஜை சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். இருப்பினும் புதனால்  அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் அக். 23-ந் தேதிக்கு பிறகு வீடு திரும்புவர். மறைமுகப் போட்டியாளர்களின் இடையூறு  குறையும். இதனால் நன்மை அதிகரிக்கும். நவ. 5,6,10,11 ஆகிய நாட்களில் சிறுதடைகள் குறுக்கிடலாம். அக்.22,23,24ல் எதிர்பாராத வகையில் திடீர் லாபம் கிடைக்கும். நவ.13க்கு பிறகு விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்.

கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.  புகழ், பாராட்டுக்கு எந்த பங்கமும் வராது. பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் சீரான பலனைக் காண்பர்.  பிரதிபலனை எதிர்பாராது உழைக்க வேண்டியதிருக்கும். நவ.6,7,8ல் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர்.  ஆனால் இந்த மாதத்தை பொறுத்தவரை புதனால் அக்.23க்கு பிறகு சிறப்பான பலன் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வாய்ப்புண்டு. நவ.13க்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.  ஆனால் குருவின் பார்வையால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். விவசாயிகள் அதிக முதலீட்டுக்கான  பயிர்களைத் தவிர்ப்பது நல்லது.  உழைப்புக்கு ஏற்ற வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். அக்.23க்கு பிறகு அதிக விளைச்சலும், கால்நடை வகையில் நல்ல வருமானமும் கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் காண்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வர வாய்ப்புண்டு. அக்கம்பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். அக். 24 முதல் நவ. 13 வரை விருப்பம் போல மங்களநிகழ்ச்சிகள் நடந்தேறும். நவ.11,12 ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும். விருந்து, விழாவுக்கு சென்று வரும் வாய்ப்புண்டு. சகோதர வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். நவ.2,3ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.

* நல்ல நாள்: அக்.22,23,24,25,26,29,30,நவ.2,3,9,10,11,12
கவன நாள்: அக்.18,19,நவ.13,14,15 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,8
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
●  நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
●  வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar